Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் முடிந்ததும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கப்படும்

மார்ச் 02, 2021 07:34

புதுச்சேரி: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு அவர் கேபினட் அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது,தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் புதுவையில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கேட்டபோது, தமிழகத்தில் தேர்வு ரத்து செய்தது தமிழக அரசின் கொள்கை முடிவு. புதுவை மாநிலத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே அவர்களுக்கு தேர்வு நடத்தலாம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தற்போது எதுவும் அறிவிக்க முடியாது.

ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். அப்போது மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகேட்டு அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
 

தலைப்புச்செய்திகள்